பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும், மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டவர்களும் இந்த படிப்பை தேர்வு செய்து படிப்பார்கள்.
பி.ஏ. மலையாளம் 3 ஆண்டுகள் கொண்ட இளநிலை படிப்பாகும். இதனை முடித்த பிறகு பி.எட்., எம்.ஏ. மலையாளம் போன்ற மேற்படிப்புகளை தொடரலாம்.
பள்ளி, கல்லூரிகளில் மலையாள ஆசிரியர் வேலை பெறலாம். பல்வேறு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றலாம். பத்திரிக்கை, தொலைக்காட்சி, செய்தி தொடர்பாளர் பணிகளுக்கும் இந்தியாவில் மலையாளம் படித்தவர்களுக்கு நிறைய பணி வாய்ப்புகள் உள்ளன.
கேரளாவில் உள்ள நிறுவனத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களிலும் பணி வாய்ப்பு பெறலாம்.
தமிழகத்தில் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இப்படிப்பை வழங்குகிறது.