ஒலி மற்றும் நிசப்தம் இரண்டின் அற்புதமான கலவையே இசை. இசைக்கலைஞர்களை வலுக்கட்டாயமாக உருவாக்க முடியாது. இசையில் நாட்டம் உள்ளவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும் தொழில்நுட்பத் திறன் மாறுபாடுகளை அறிந்து கொள்ளவும் இசைப்படிப்புகள் உதவுகின்றன. இசைக் கலைஞர்களுக்கு ராகம், தாளம், பல்லவியில் நல்ல தேர்ச்சி தேவை. குழல் இடை புகுந்து வெளியேறும் தென்றலையும், அருவியிடை தெறிக்கும் நீரின் ஓசையையும் பகுத்துப் பார்க்கும் உணர்ச்சி கொண்டவராக இருப்பதும் அவசியம். மகிழ்ச்சி, கோபம், துக்கம், தாகம், தாபம், இரக்கம், பக்தி, சோகம் என்ற மனித உணர்வுகளை இசையில் வடிக்க இசைப்பாடம் உதவுகிறது. பாடுபவர் முதல் கருவிகள் இசைப்பவர் வரை அத்தனை பேரும் இத்துறையில் அடங்குவர். இசையமைப்பாளர், வாத்திய கலைஞர், பின்னணிப் பாடுவோர், சிறப்பு சப்தம் உருவாக்குபவர், மிமிக்ரி கலைஞர் என்று இசைத்துறையில் பங்களிப்போர் ஏராளமானோர்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.