இந்திய கலாசாரத்தின் பெருமை உலகம் முழுவதும் அறியப்பட்டது. பல்வேறு கலாசார வேறுபாட்டுத் தன்மையே இந்தியாவின் தனிச்சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றக்கூடிய பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள் சிறப்புடையதாக இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடரும் பழமையான பண்பாடுகள், அன்னியர் வருகையின் போது ஏற்பட்ட மாற்றங்கள் ஆகிய அனைத்தையும் தன் கலாசாரத்துக்குள் தாங்கி நிற்கும் பெருமை கொண்டதாக இந்தியா திகழ்கிறது. நம் வாழ்க்கையில் நவீனம் புகுந்துவிட்டாலும் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டாலும் நமது வாழ்க்கை நெறிகள் நம்பிக்கைகள் இன்னும் அப்படியே தொடரத்தான் செய்கின்றன. சுற்றுலா, பண்பாட்டுத் துறைகளில் இத்துறையில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு.
படிப்பு காலம் மூன்று ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை படிப்பும் உண்டு.