இன்றைய காலத்தில் மீடியாக்களின் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது. இதழியல் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு மீடியா உலகிற்கு தேவையான அடிப்படை அறிவை வழங்குகிறது. இந்த கல்வி கற்பவர்கள் பத்திரிக்கை, ரேடியோ மற்றும் டி.வி போன்றவற்றில் நிருபராக பணியாற்றவும், அரசு மற்றும் தனியார் தகவல் தொடர்பு பிரிவுகளில் வேலை வாய்ப்பையும் வழங்குகிறது. அதனுடன் மற்ற பத்திரிக்கைகளுக்கு எழுதும் எழுத்தாளர்களாகவும் உருவாக்க உதவுகிறது.