மனதை அமைதிப்படுத்தி உடல் நலத்தைப் பேணுவதற்கு தியானம் உதவுகிறது. தியானம் செய்யும் போது மனம் ஒருநிலைப்படுத்தப்படுவதால், உடலும், மனமும் ஆரோக்கியமடைகின்றன. நலத்துக்கான மாற்று மருத்துவம் மனிதனின் மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகிய அனைத்தின் மீதும் கவனம் செலுத்துகிறது. உடல், உளவியல் மற்றும் ஆன்மிக ரீதியாக நலமுடன் வாழ்ந்தால் தான் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும். பல பிரச்னைகளுக்கு இயற்கை மருத்துவம் மூலம் சிகிச்சை பெறுவது தான் பாதுகாப்பானது. இந்த டிப்ளமோ படிப்பு இதில் அதிக கவனம் செலுத்துகிறது. நல்ல ஆளுமைத் திறனை வளர்த்து, வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வழிமுறைகளை மாணவர்கள் இந்த பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ளலாம்.