தற்போதைய உலகில் தகவல் தொழில் நுட்பம் எனப்படும் ஐ.டி., பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இத்துறையில் படித்தவர்கள் கைநிறைய சம்பாதிக்கின்றனர். தகவல் தொழில் நுட்பத்தில் அச்சு, ரேடியோ, டிவி, தொலைபேசி ஆகியவற்றைத் தாண்டி, தற்போது இன்டர்நெட் வந்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் என்பது ஹார்டுவேர், சாப்ட்வேர்களை பயன்படுத்தி தகவல்களை உருவாக்குதல், சேமித்தல், மாற்றுதல், மீட்டெடுத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய பணிகளைக் குறிக்கும். நிறுவனங்களின் தேவைக்கேற்ப தொழில் நுட்பங்களை உருவாக்கித் தருவது ஐ.டி., துறையின் முக்கியப் பணியாகும். தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கும், பணிபுரிய விரும்புபவர்களுக்கும் உதவும் வகையில் டிப்ளமோ படிப்பு அமைந்துள்ளது. ஐ.டி., துறையின் அடிப்படை செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் விதத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.