இந்தியாவில் சினிமா நடிகர்களுக்கு இருக்கும் வரவேற்பு மற்ற துறையினருக்கு கிடைப்பதில்லை. எனவே தான் சினிமா நடிகராக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கிறது. சினிமா நடிப்பு என்பது ஒரு கலை. அந்த கலையின் நுட்பங்களை டிப்ளமோ மூலம் கற்றுத் தருகிறார்கள். ஆனால் இந்த டிப்ளமோ படிப்பதால் மட்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடும் என்று சொல்லி விட முடியாது. சினிமாவில் நடிப்பதற்கு திறமையுடன், கற்பனைத்திறனும், கற்றுக் கொள்ளும் திறனும் மிக அவசியம். நடிகராவதற்கு வேண்டிய அனைத்து தகுதிகளுடன், இந்த டிப்ளமோவும் கூடுதல் தகுதியாக இருந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.