சுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் என்ற இந்த பாடத்திட்டம் சுற்றுப்புற சூழ்நிலை விழிப்புணர்வு, நிர்வாகம், பாதுகாப்பு பற்றி கற்றுத் தருகிறது. சூற்றுப்புற சூழ்நிலை சீரழிவதை தடுப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களால் காற்று மற்றும் நீர் மாசுபடுதலைத் தடுக்கவும், அவற்றில் இருந்து நீர்நிலைகளை பாதுகாக்கவும், வாகனங்களில் இருந்து ஏற்படும் புகை மற்றும் இரைச்சல்களினால் சூழ்நிலை கெடுவதை தடுக்கவும், இவற்றை தடுப்பதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அறிந்து கொள்ள இந்த கல்வி உதவுகிறது.