அறுவை சிகிச்சையின் போது நோயாளிக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து அளிக்கப்படுகிறது. நோயின் தன்மை மற்றும் அவருக்கு அளிக்க வேண்டிய மயக்க மருந்தின் அளவு ஆகியவற்றை அனஸ்திசியாலஜிஸ்ட் நிர்ணயிக்கிறார். இவ்வாறு மயக்க மருந்தை பயன்படுத்தும் அறிவியல் மருத்துவ முறை அனஸ்திசியலாஜி எனப்படுகிறது. அனஸ்திசியாலஜி நிபுணர்கள் நோயை கண்டுபிடிக்கவும், தாங்கமுடியாத வலியால் துன்பப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த முறையை பின்பற்றுவார்கள். நர்ஸ் மற்றும் நிபுணத்துவம் பெற்ற அனஸ்திசியாலஜிஸ்ட்களுக்கு டிப்ளமோ படித்த அனஸ்திசியாலஜிஸ்ட் உதவி செய்வார்கள்.