பொது, தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், சுற்றுலா விடுதிகள், முகாம்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் உயர்கல்வி கற்பவர்கள் தங்குமிடங்கள் போன்றவற்றை நடத்த இந்த கல்வி உதவுகிறது. இது தங்குபவர்களுக்கு திருப்தியாகவும், எந்தவிதமான பிரச்சனைகளுக்கும் இடமளிக்காமலும் நன்கு திறமையாக, பொருளாதாரத்திற்கு தகுந்தபடியும் நடந்து கொள்ள கற்றுத்தருகிறது. இவர்களுக்கு தனியார் பிரிவில் உணவகங்கள், கப்பல் பிரிவுகள், கலந்தாய்வுக்கூடங்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து நடத்தப்படக்கூடிய காப்பகங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.