கட்டடங்கள், அணைகள், பாலங்கள் முதலியவற்றை வடிவமைத்து, கட்டுமானப்பணியில் ஈடுபடுவதற்கான இன்ஜினியரிங் படிப்பை இந்த டிப்ளமோ கற்றுத் தருகிறது. 230 ஆண்டுகளுக்கு முன்பு கட்டட கலை வளர்ச்சியடையாத காலத்தில், மனிதன் அணைகள், கழிவு பாதைகளை கட்டினான். ஆனால் இப்போது இத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி புகுந்துவிட்டது. ரோடு அமைத்தல், விமான நிலையங்கள் பராமரிப்பு, துறைமுகம் வளர்ச்சி பணி, உயர்ந்த கட்டடங்களை வடிவமைப்பது, பாலங்கள், பாதாள சாக்கடை அமைத்தல், நீர் கழிவை அகற்றி சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் முதலிய பணிகளிலும் நவீன கட்டடக் கலை நுட்பங்கள் பயன்படுகின்றன.