பொருளாதாரம் மற்றும் சமூகத்தை பலப்படுத்துவதாக கூட்டுறவு அமைகிறது. மக்கள் பங்கேற்கும் அரசு கூட்டுறவு முயற்சி, மக்கள் மக்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் கூட்டுறவு முயற்சி பற்றியும் மாணவர்கள் இப்பாடப்பிரிவில் அறிந்து கொள்கின்றனர். இந்தியாவின் முதுகெலும்பான கிராமப் புறங்களில் கூட்டுறவு துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.