மருத்துவத் துறையில் ஒரு முக்கிய அங்கம் இது். உயிரை காப்பாற்றுவது, உடலுறுப்புகளின் இழப்பை தடுப்பது, இக்கட்டான நிலையில் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவது ஆகியவை அவசர நிலை பாராமரிப்பு பணியாளர்களின் பணிகளாகும். இப்பணி குறித்த விபரங்களை இந்த டிப்ளமோ படிப்பு சொல்லித் தருகிறது. பாதிக்கப்பட்டவரின் நிலையை அறிதல், உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்தை அளவிடுதல், தீக்காயங்கள் போன்ற ஆபத்தான பாதிப்புகளுக்கு தேவையான பொதுவான முதலுதவி அளித்தல், அவசரத்துக்கு கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து சிகிச்சை அளிக்க தெரிந்து கொள்ளுதல், அவசர நிலை மருந்துகளையும், கருவிகளையும் கையாளத் தெரிந்து கொள்ளுதல் போன்றவற்றை இந்த டிப்ளமோ மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.